லக்னோ:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியிலும்,கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டி யிட்டார்.காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதி யான அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி 55 ஆயிரம் வாக்கு கள் வித்தியாசத்தில் ராகுலை தோற்கடித்தார்.
வயநாடு தொகுதியில் மட்டுமே அவரால் வெற்றி பெற முடிந்தது.காங்கிரசின் கோட்டையான அமேதி தொகுதியில் ராகுலை மக்கள் ஏன் கைவிட்டார்கள் என்பது புரியாமல் காங்கிரசார் தவித்து வருகிறார்கள்.இந்நிலையில், தனது தோல்வி குறித்து ஆராய காங்கிரஸ் பொதுச் செய லாளர்களில் ஒருவரான ஜூபைர்கான், ரேபேரலி தொகுதி பொறுப்பாளர் கே.எல்.சர்மா ஆகியோர் அடங்கிய 2 பேர் கொண்ட குழுவை ராகுல் காந்தி அமைத்துள்ளார்.